Tuesday, April 12, 2016

இடமணல்  ஓதவநேஸ்வரர் --சீர்காழி 

ஆலயம்  எழுப்ப  மணல் எடுத்த இடம் என்பதால் இப்பெயர் .....
சுந்தரர்  இங்கு பத்து  சிவாலயங்களை  கட்டினார் என்கிறது புராணம் ...
விநாயகரின்  ஆணைகிணங்க.......

சுந்தரரும்  அவர் சீடர்களும் காவேரியில் வடபால்  உள்ள ஆலயங்களை  தரிசித்துகொண்டு  வந்த பொது பசியால்  அவதிப்பட்டனர் .அப்போது  அந்தணர்  வேடத்தில் வந்த விநாயகர் அவர்களுக்கு  கட்டமுது அளித்தார்.

வந்தது  வினாயகர்  என்பதை  உணர்ந்த சுந்தரர் ,பெரிதும்  மகிழ்ந்து  இந்த உதவிக்கு  என்ன கைம்மாறு செய்வது? என வினவினார் ...

தன  தந்தைக்கு  இங்கு பத்து  சிவாலயங்கள்  அமைக்குமாறு பணித்தார் பிள்ளையார் ...அதன் படி பத்து  சிவாலயங்களை  அமைத்தார்  சுந்தரர்  அம்மையபனுக்கு ...

அதில்  ஒன்று தான் ஒதவநேஸ்வரர் திருகோயில் .....
மூலவர்  மிகப்பெரிய  சுயம்பு திருமேனி ...

நாளைடைவில்  திருகோயில் புதையுண்டு  போனது ......

தன  உறவினரை  பார்க்க வந்த  ஒரு வயதான தம்பதியர் மூலம் ஈசன் தன்னை, ஒரு  மிகப்பெரிய  அரச மரத்தின் அடியில் ,  வெளிப்படுத்தி கொண்டான் ....பிறகே  திருகோயில்  எழுப்பப்பட்டது .
இறைவி அன்னபூரணி ....

தினமும் ஒருகால பூசை நடைபெறும்  இந்த ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் விமரிசையாக  கொண்டாடபடுகிறது...
இழந்த  பொருட்களை  மீட்க இங்கே  நேர்ந்து  கொள்ளலாம் .

சீர்காழி-திருமுல்லைவாசல்  வழித்தடத்தில் எட்டு கிலோ மீட்டரில்  உள்ளது எடமணல் கிராமம் ......



No comments:

Post a Comment