Sunday, April 24, 2016

வேதங்கள்  வழிபட்ட  வேதஸ்ரேணி (வேளச்சேரி )

வேதங்கள்  வழிபட்டதால்  இப்பெயர் பெற்றது ....
தன் பக்தனான  மார்க்கண்டனின் ,உயிரை  பற்றிக்க சென்ற  யமனை இறைவன் எட்டி உதைத்ததோடு , அவன் பதவியையும் பறித்தார் .....
பதவியை  இழந்த யமன் இத்தலத்தில் இறைவனை , தீர்த்தம் உருவாக்கி வழிபட்டான் .....
யமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் அளித்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார் .
எனவே  இத்தலத்து இறைவன்  தண்டீஸ்வரர் என பெயர் பெற்றார் ..

இங்கு  வந்து வணங்கினால்  இழந்த  பதவியை  மீண்டும்  பெறலாம் ...
ஆயுள் விருத்தி பெற இங்கு  வந்து  வணங்கலாம் .....
தை  முதல் நாள் இங்கு ஆதவன் இறைவனை வழிபடுகிறான் .....
அம்பாள் கருணாம்பிகை  முன்பு ஸ்ரீ சக்கரம்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

எல்லா  திருகோயில்களிலும்  நின்ற  நிலையில் காணப்படும் வீரபத்திரர் 
இங்கு  மான்  மழு  ஏந்திய வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளார் ..

இவரே  இத்தலத்தின் காவல்  தெய்வமாக விளங்குகிறார் ....




No comments:

Post a Comment