Wednesday, April 20, 2016

பொன்பரப்பி  ஸ்வர்ணபுரீஸ்வரர் --விழுப்புரம்  மாவட்டம் 

நவபாஷணத்திற்கு இணையான சூரியகாந்த கல்லினால்  செய்யப்பட ஐந்தரை அடி  உயர 16 பட்டைகளை  கொண்ட  சோடச லிங்கம் .....
ஆவுடையாரும் பதினாறு  பட்டைகளை கொண்டிருப்பது  சிறப்பு ...

ஆவணி  பௌர்ணமி  மற்றும் பங்குனி உத்திர நாளில்  சூரியன்  நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நுழைந்து  இறைவனை  வழிபடுகிறான் ...

காகபுஜண்டர் இத்திருகோயிலில்  சமாதி  அடைந்துள்ளார் ...

இத்தலம்  பஞ்ச பூத தலத்திற்கு இணையாக  கருதப்படுகிறது .....
கருவறை மிக உஷ்ணமாகவும் , உக்கிரமாகவும் இருக்கும் ...
கருவறை  தீபம், இதன் காரணமாக  துடித்து கொண்டே  இருக்கும் ....

இங்கு  பால்  தேன், தயிர் திரவியங்கள் உட்பட 16 வகையான  அபிஷேக பொருட்களால் இறைவனுக்கு  அபிஷேகம்  செய்யப்படுகிறது ,,,,,,
இவை  துளியும்  பிசராமல் ஒரே நேர்கோட்டில்  ஆவுடையாரின்  அடிப்பாகம் வரை இறங்கி  லிங்க  பீடத்தில்  ஐக்கியமாவதை  காணலாம் ....

சிவனின்  தலையில்  சூடிய  சந்திர  கலையிலிருந்து  தோன்றியவர்  காகபுஜண்டர்நினைத்த  நேரத்தில்  காக்கை வடிவம் எடுக்க கூடியவர் ..
இவரால்  பிரதிஷ்டை  செய்யப்பட  இப்பெருமானை வணங்குபவர்களுக்கு சந்திர  தோஷம் , சனி தோஷம் எதுவாய் இருந்தாலும் நீங்கும் ...

அம்பாள்  இங்கு மகாலஷ்மி அவதாரமாக  விளங்குவதால் ஸ்வர்ணாம்பிகை
என  வழங்கப்பபடுகிறாள்...
 எங்கே உள்ளது?

சேலம்  மாவட்டம்  ஆத்தூரிலிருந்து  கள்ளகுறிச்சி  செல்லும் வழியில் உள்ள  அம்மையகரம் ....இங்கிருந்து  மேற்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது பொன்பரப்பி .....


No comments:

Post a Comment