Wednesday, April 6, 2016

கரவீரம் ----கரவீர நாதர் --திருவாரூர் 

சிவபெருமான்  தேவ  கன்னியரின்  வேண்டுகோளுகிணங்க இங்கு  தானே லிங்கம் அமைத்து  தந்தார் ....

அலரி  தல விருட்ஷம் .....கௌதம  முனிவர்  தான்   இங்கு  தல விருட்ஷமாக  விளங்க வேண்டும்  எண்டு இறைவனை  கேட்டு  பெற்றார் ....

எனவே இங்கு அமாவாசை தினத்தன்று பெண்கள்  இங்குள்ள கௌதம மகரிஷி  ஜீவ சமாதியில் உள்ள தல விருட்ஷத்திற்கு  தண்ணீர்  ஊற்றி  வணங்கிய  பின்னரே , இறைவனை  வழிபடுகின்றனர் .....

அவ்வாறு செய்தால்  அடுத்த அமாவாசைக்குள்  திருமணம்  நிச்சயமாகிவிடும் என்ற நம்பிக்கை  நிலவுகிறது ...

இங்கு  ஒரு இரவு தங்கி   மறுநாள்  இறைவனை  வணங்கினால் , சகல விதமான க்ரஹ தோஷங்களில்  இருந்து  விடுதலை  பெறலாம் ...

பிரம்மபுரீஸ்வரர்  என்றும் இப்பெருமான் அழைக்கப்படுகிறார் ....

மிக  பிரமாண்டமான  வடிவத்தில்  இங்கு  இறைவன்  அருள்கிறார் ....
அன்பர்களே.... தவற விடாதீர்கள் இத்தலத்தை  தரிசிக்க ....
எப்படி செல்வது?

குடந்தை  --திருவாரூர்  மார்க்கத்தில் உள்ளது  கரவீரம்  பேருந்து நிறுத்தம் .
பிரதான  சாலையிலேயே  திருகோயில்  அமைந்துள்ளது .



No comments:

Post a Comment