Monday, April 4, 2016

துயர்  தீர்க்கும் திருபுடைமருதூர் 
துன்பங்கள் யாவும்  தவிடு பொடியாகும் பரிகார தலம் ...

தலை  மருது, இடைமருது, கடைமருது  என்பார்கள்
அவை முறையே  ஸ்ரீசைலம் , தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் 
திருநெல்வேலி மாவட்டம்  திருபுடைமருதூர் ஆகும் .....

கருவூர் சித்தருக்காக இறைவன்  தலை சாய்த்து இங்கே அருள்கிறார் ...
அவர்  தரிசனம் செய்ய வந்தபோது தாமிரபரணி  ஆற்றில்  வெள்ளம்  ஏற்பட்டது ..
திகைத்து நின்ற அவர்  அக்கரையிலிருந்தே  நாரும்பூநாதா......என்று  அழைக்க 
இறைவன் தன தலை சாய்த்து செவிமடுத்தான் ...அவன் அருளால்  தாமிரபரணி  ஆறு  வழிவிட  கருவூரார் இறைவனை  தரிசனம்  செய்தார் ..

சுவாமி  மீது  வெட்டுபட்ட தடம் , மற்றும்  மான் மீது  எய்த  அம்பு பட்ட தடம் உள்ளது ....

புடார்ஜுநேஸ்வரர் என்பது இத்தல இறைவன் நாமம் .....

மருத  மரம்  தல விருட்ஷம் ..

தீராத  குடும்ப  கஷ்டங்கள் நீங்க ,  திருமண தடை புத்திர  தோஷம்  நீங்க இங்கே  வந்து  பிரார்த்தனை  செய்து  கொள்ளலாம். அதுமட்டுமல்ல அன்பர்களே...

காசிக்கு  நிகரான  தலம் என்று இறைவன் தன்  திருவாக்கினாலே உணர்த்திய தலம் இது ஒன்று தான் ..

வாருங்கள்...உங்கள் துன்பம் பறந்தோடுவதை  அனுபவத்தில்  உணர்வீர்கள் ..


No comments:

Post a Comment