Tuesday, April 26, 2016

வல்லம்  குடைவரை  கோயில்கள்  --செங்கல்பட்டு 

அறியபட்டாத  அபூர்வ  ஆலயம் 

வல்லம்  செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்..
யாரும் அறியாத வகையில் இங்கு  பல்லவர்கள் காலத்திய குடைவரை கோயில்கள்  உள்ளன .
இங்கு இரண்டு சிவாலயங்களும் ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது .
தற்போது ஒரு சிவாலயத்தில் பெருமான் இல்லை.
ஒன்றில் மட்டுமே வேதாந்தீஸ்வரர் என பெயர் கொண்டு பிரம்மாண்டமான லிங்கத்திருமேனியுடன் சேவை சாதிக்கிறார்.
அம்பாள்  ஞானாம்பிகை...

இங்கு மட்டுமே பஞ்ச மூர்த்திகளான சிவன் அம்பாள் விநாயகர் ,நந்தி சண்டிகேஸ்வரர் ஆகியோரை ஒரே இடத்தில் நின்றபடி காணமுடியும் ...

கிழக்கு  நோக்கிய  இறைவன் மீது  தினமும்  சூரிய கதிர்கள்  படர்வதாக  சொல்கிறார்கள் .

செங்கல்பட்டிலிருந்து இத்திருகோயில் மூன்றே கிலோமீட்டரில் உள்ளது .
1300 ஆண்டுகள்  பழமையான இத்திருகோயிலில் செதுக்கப்பட்டுள்ள   துர்க்கை விநாயகர் வடிவங்கள் பார்த்து  பார்த்து ரசிக்கத்தக்கவை ...
பிரம்மாண்டமானவை ...

ஒருமுறை  சென்று  தான்  தரிசியுங்களேன் ....



No comments:

Post a Comment