Saturday, April 16, 2016

திருமால்   வழிபட்ட   ஆதிபிதேசம் --காஞ்சி 

இத்திருகோயில் ஆலடிபிள்ளையார்   கோயிலுக்கு  தெற்கில், கீரைமண்டபம் அருகில் , விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு  நேர் எதிரில்  அமைந்துள்ளது ..

தன்னை  ஒதுக்கி யாகம் செய்ய முற்பட்ட  தன கணவன் பிரம்மாவின் மீது 
மிகுந்த கோபம் கொண்ட  சரஸ்வதி , வேகவதி  என்ற பெயருடன் மிக வேகமாக, யாகம் நடைபெறும் காஞ்சியை நோக்கி ஓடிவருகிறாள் யாகத்தை தடுக்கும்  நோக்கத்துடன் ....

முற்றிலும்  காஞ்சி  அழிந்துவிடும் பேராபத்தை  உணர்ந்த  திருமால் ,நெடுஞ்சாண்கிடையாக படுத்து சரஸ்வதியை தடுத்து யாகத்தை காப்பாற்றுகிறார் .

அதோடு  விளக்கொளி  அளித்து யாகத்திற்கு துணை புரிகிறார் .....என்பது தல புராணம் .....

அப்போது  சிவ பூஜை  செய்ய விரும்பும் அவர் இப்பெருமானை இங்கு ஸ்தாபிதம் செய்து  வணங்குகிறார் ......
அவரே ஆதிபிதேஸ்வரர் , இப்பகுதி  ஆதிபிதேசம் எனவும்  வழங்கபடுகிறது .

இப்பெருமானை  வணங்குவதால் அஸ்வமேத  யாகம்  செய்த பலன் கிட்டும் ...

இம்மைக்கும்  மறுமைக்கும்  நற்பலன்கள் பெறலாம் .


No comments:

Post a Comment