Friday, April 8, 2016

சிறப்பு  மிக்க  சிவனாகரம்  திருகோயில் --வடமட்டம் 

அன்பர்களே , கிராமங்கள்  நம் நாட்டின்  கண்கள்  என்றால், அங்கு உள்ள திருகோயில்கள் ,உயிர்நாடியை போன்றது ......

அதனால்  தான்  கோயில்  இல்லை ஊரில்  குடியிருக்க வேண்டாம் ...என்றும் 
திருகோயில் இல்லாத ஊர்  சுடுகாட்டிற்கு  சமமானது என்றும்  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர் ...

எந்த  இடத்தில்  திருகோயில்கள்  பராமரிக்கப்படவில்லையோ, வழிபாடு இன்றி புறக்கணிக்கப்பட்ட  நிலையில் உள்ளதோ , அப்பகுதி கண்டிப்பாக  செழுமையான  நிலையில்  இருக்காது .

எனவே தான் நம்  நாட்டில்  ஆயிரக்கணக்கான  திருகோயில்கள்  ஆன்றோர்களால்  நிர்மாணிக்கப்பட்டது ..அவர்கள்  தினசரி  திருகோயில்களுக்கு  செல்வதை  தன்  கடமையாக கொண்டிருந்தனர் ..

அன்பர்களே  இதோ உங்களுக்காக   சிவனாகரம்  திருகோயில் பற்றி  தெரிவிக்கிறேன் .....எங்கிருக்கிறது இந்த கோயில் ?  வடமட்டம்  வட்டத்தில் 
உலக புகழ் பெற்ற  கோனேரி ராஜபுரம் அருகில்  உள்ளது சிவனாகரம் .

இவ்விடத்தை   குடந்தை  காரைக்கால்  மார்க்கமாக  அடையலாம் .....வடமட்டத்திற்கு குடந்தையிலிருந்து  பேருந்து  வசதியும் உண்டு ...

வடமட்டத்திலிருந்து  நடந்தே  சென்று  விடலாம் ....மிக பழமை வாய்ந்த ஆலயம் .. அருகிலேயே  களபாகரம் கைலாசநாதர் கோயில் உள்ளது .
கோனேரிராஜபுரம் திருகோயில் இங்கிருந்து வசதி யாக சென்று  வரலாம் ..

இன்னும்  என்ன யோசனை ? உடனே கிளம்புங்கள் ....கைலாசநாதர்  காத்திருக்கிறார் .....


No comments:

Post a Comment