Monday, April 11, 2016

திருமேற்றளிகை  வேம்புநாத பெருமான் 

மேற்றளிகை  என்பது மேற்கு திசையில் அமைந்த  திருகோயில் என்பது  பொருள் ...பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருகோயில்(துர்க்கை கோயில்) மேற்கு திசையில் அமைந்துள்ளது  பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் ....இத்திருகோயில் சிதிலமடைந்து திருப்பணியை  எதிர்நோக்கியுள்ளது .....

அதன் அருகிலேயே ஒரு மைல் தூரத்தில் அடர்ந்த  வாழைமர  தோப்பினுள் ஆவுடையாருடன்  உயர்ந்த  ஒரு லிங்கத்திருமேனியும் , பாண  லிங்கமாக ஒரு திருமேனியும் வழிபாடற்ற  நிலையில் உள்ளார்கள் .....

அவ்வப்போது அடியார்கள் வந்து இப்பெருமானை வணங்கி செல்கின்றனர் ..

மற்றபடி இப்பெருமான் பூசை புனஸ்காரங்கள் ஏதுமின்றி வானமே  கூரையாக அருள்பாலித்து வருகிறார்...

இப்பெருமான்  எப்போது  கோயில்  காண்பார்? அந்த கைங்கர்யம் கிடைக்கப்போகும் பாக்கியசாலி யார்?  அந்த  இறைவன்  ஒருவரே அறிவார்.


No comments:

Post a Comment