Saturday, April 9, 2016

ஆயிரம்  மலர்களே  மலருங்கள் ...திருவீழிமிழலை 

மஹா விஷ்ணு  ஆயிரம்  மலர்களால்  அர்ச்சித்து தன்  பிரயோக  சக்கரத்தை அடைந்த இடம் .....
ஆயிரமாவது  மலராக தன்  கண் மலரையே பெயர்த்து அர்ச்சித்த இடம் ..
இறைவன்  காலடியில்  இன்றும்  அந்த கண் மலரை  காணலாம் .....

அப்பரும்  சம்பந்தரும்  வாசி தீரவே காசு  நல்குவீர்  என்று  தேவார பாடல்களால் தினம் ஒரு பொற்காசு  பெற்று  மக்களின் பஞ்சம்  நீக்கிய தலம் ...

இறைவன்  காசி யாத்திரைக்கு  செல்லும் கோலத்தில்  காட்சியளிப்பதால் மாப்பிளை  சாமி  எனப்படுகிறார் ...
மகாமண்டபம்  திருமண  மண்டபம் போல் பந்தகாலுடன்  காட்சியளிப்பது  இங்கு மட்டுமே .....

கொடிமரம்  அருகில்  சிவலிங்கம்  அமைந்திருப்பதும்  இங்கே மட்டுமே.

மிகப்பெரிய  சிற்ப வேலைபாடுகள்  நிறைந்த  வௌவால் நெற்றி  மண்டபம் இங்குள்ள சிறப்பம்சம்  ஆகும் ...

கும்பகோணம் ---பூந்தோட்டம்  சாலையில்  பூந்தோட்டம்  அருகே உள்ள திருவீழிமிழலை திருகோயில்  தான்  இத்தகைய  சிறப்புகள்  ஒருங்கே  அமைந்த  மிகப்பெரிய  மாடகோயில் ஆகும் ....

இங்கு வந்து  வணங்குவதால் ஏழ்மை அகலும் ...பொருள்  வரவு , தன வரவு உண்டாகும் .... திருமணம் ஆகாதவர்களுக்கு  திருமணம் கைகூடும். ....




No comments:

Post a Comment