Wednesday, June 1, 2016

கதறி அழுதுவிடுவோம் கருவி திருகோயில் நிலை கண்டால் ......

இன்று  பிரதோஷம் அன்பர்களே....திருகோயில் தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்...
அதுவும் இதுபோன்று நலிவுற்ற திருகோயில்கள் தரிசனம்  பெரிதும் நன்மை பயக்கும்...

கருவிழுந்த நாதபுரம் என்பதே இன்று கருவி என்று வழங்கப்படுகிறது ....
ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிர்கள் தோன்றுவதற்குரிய  பீஜங்கள் , கரு, சிதறி விழுந்த இடம் என்பதால் இப்பெயர் .....

எங்கு உள்ளது?

மயிலாடுதுறை --பூம்புகார் சாலையில் கருவி என்ற இடத்திற்கு முன் வரும் சாவடி கூட் ரோடு என்று கேட்டு இறங்க வேண்டும்..எதிரில் தென்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வழியாக செல்லும் ஒரு சிறிய சந்தின் வழியே செல்ல 5 நிமிடத்தில் இத்திருகோயில் தென்படுகிறது .....

ஒரு நல்ல ஓவியத்தை கன்னாபின்னா வென்று கிழித்து போட்டது போல் உள்ளது இன்றைய கோயிலின் நிலை.
தல புராணம் என்று எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை .....உதவ ஒருவரும் இல்லை....கோயில் திருமேனிகள் அனைத்தையும் ஒரே shed இல் வைத்துள்ளார்கள்....ஒரே அழகிய திருமேனி கோவில் வெளியே காணப்படுகிறது ...அருகில் உள்ள கிடாரன் கொண்டான் என்னும் இடத்திலிருந்து அர்ச்சகர் ஒருவர் அவ்வப்போது வந்து பூசை செய்துவிட்டு செல்வதாக கூறுகிறார்கள் .... 

எது எப்படியோ ....இத்திருகோயிலை சீரமைக்க செப்பனிட நல்ல உள்ளங்கள் வரும் வரை இறைவன் காத்திருக்க வேண்டியது தான் ....


No comments:

Post a Comment