Thursday, June 2, 2016

திருத்தியமலை ஏகபுஷ்ப ப்ரியநாதர் திருகோயில் .......
பூர்வ ஜென்ம வினைகள் நீக்கும் திருத்தலம் 

திருச்சி டோல்கேட் --துறையூர் சாலையில் பெரமங்கலம் கடைதெரு நிறுத்தத்திலிருந்து  5 கிலோமீட்டரில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது .....மிக பழமை வாய்ந்த பிருங்கி மகரிஷி , அகத்தியர் ஆகியோர் வழிபட்ட  இந்த திருகோயில் ...

அன்னை தாயினும் நல்லாள் சமேத ஏக புஷ்ப பிரிய நாதர் ....

தேவலோக மலரான தேவ அர்க்ய வல்லி  என்ற மலர் பல காலம் தவம் இருந்து இத்தலத்தில் இறைவன் மீது நிரந்தர வாசம் செய்யும் வரத்தை அடைந்தது ....என்பது தல புராணம் ...அதனால் தான் இறைவன் இப்பெயர் பெற்றார் ......

சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம்.....இறைவன்  சுயம்பு .....

அன்பர்களே பேருந்து வசதி மிக குறைவு என்பதால் ..சொந்த வாகனங்களில் செல்வது உசிதம் .....
ஆட்டோ வசதி உண்டு .....

திருமண தடை நீக்கும் தலம் ...மற்றும் பிரம்மஹத்தி தோஷம் உட்ப சகல வித தோஷங்களும் இங்கு வந்து இந்த இறைவனை  உள்ளன்போடு பிரார்த்தனை செய்ய அறவே நீங்கும் என்பது திண்ணம் ...

11 திங்கட்கிழமை இங்கு வந்து இறைவனுக்கு வில்வத்தால் எவர் ஒருவர் அர்ச்சனை  செய்கிறார்களோ அவர்கள் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அனைத்தையும் உடனுக்குடன் இப்பெருமான் நீங்கி அருள் புரிகிறார்...

இந்த அரிய வாய்ப்பை தவற விடலாமா? பயன்படுத்தி கொள்ள வேண்டாமா? 

1) Caretaker Ganesan: He has the temple key, and resides opposite to the temple. You can call him and visit the temple. He is very kind and helpful. Ph. no. 90472-61838.

2) Gurukkal Hari Subramaniam: Very young and friendly. You can contact him also.

Ph. No. 98655-27538




1 comment:

  1. the parents who bring their children is good for their good charector

    ReplyDelete