Tuesday, June 28, 2016

முயற்சிக்க சித்தமாயிருக்கும் மக்கள் ....முட்டுக்கட்டை போடும் அரசு ....

அன்பர்களே...

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி திருக்கோயிலை காப்பாற்ற ஒன்று கூடுங்கள்...

பதற வேண்டாம்....இது  தஞ்சை மாவட்டம் , மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் அல்ல. நாகை மாவட்டம் ., திருக்குவளை வட்டம், திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் உள்ள  மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில் ....

3 ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட காலை களஞ்சியம் ,,,,.இன்று சின்னாபின்னமாகி அதன் மொத்த அழகையும் தொலைத்து நிற்கிறது ......பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது ...

அன்பர்களே......இத்திருக்கோயிலின் சிறப்புகள் பார்ப்பவர்கள் விழிகளை விரிய வைக்கும் ...
எந்த திருக்கோயிலிலும் அதனை கட்டிய மாமன்னன் சிலை மூலவருக்கு நேரெதிரே கை கூப்பிய நிலையில் காண முடியாது 

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் அமர்ந்த நிலையில் உள்ள துர்கை அம்மனை காண முடியாது ..

இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் சனி பகவான் இரு காக்கை வாகனங்களுடன் காண முடியாது 
இங்கு காணலாம் ...

எந்த திருக்கோயிலிலும் இல்லாத வகையில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சண்டிகேஸ்வரர் திருமேனி இங்கே உள்ளது ....இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்..

இதன் சிறப்புகளை .....
இவ்வாறு ஏராளமான அற்புதங்களை , சூட்சும ரகசியங்களை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை கட்டிய குலோத்துங்க சோழன் கண்டால் கதறி அழுது விடுவார் ....
அம்பாள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளல் ...ஆகையால் இதை  தெரிந்து வைத்துள்ள திரைப்பட துறையினரும் அவ்வப்போது இங்கு வந்து வணங்கி செல்கின்றனராம் ...

அன்பர்களே   இனியாவது காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு இத்திருக்கோயிலுக்கு முறையாக வழங்க வேண்டிய அனுமதியையும் , பொருள் உதவியையும் வழங்கி , மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய இத்திருக்கோயிலை புனரமைத்து தமிழக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் ......

இது அரசின் தலையாய கடைமை ....

அன்பர்களே.. கிராம வாசிகள் திருப்பணி குழு அமைத்துள்ளனர்..  அதன் விபரங்கள்..
STATE  BANK  OF  INDIA 
திருத்துறைப்பூண்டி கிளை 
SBI  A / C NO : 35074643072
IFSC  CODE  NO  000936  
தொடர்புக்கு :

9486074234, 9787653065, 9626749735, 9843343317
EMAIL :
Srimahalingamswamy@gmail.com



No comments:

Post a Comment