Wednesday, June 29, 2016

5 முறை நிறம் மாறும் ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர் 

அன்பர்களே....

திருவள்ளூர் மாவட்டம் பல அரிய  புராதனமான திருக்கோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது .....
அவற்றுள் பல பக்தர்கள் வருகையின்மையால் வெளிச்சத்திற்கு வராமலே உள்ளன......

அவற்றில் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஈக்காடு என்னும் கிராமம் ...
இங்குள்ள சிவன் கோவிலில் மூலவரான பெருமான் இன்னதென்று அறிய முடியாத வகையில் தாமரை தண்டு போன்ற பாண வடிவம் கொண்டு  அருள் பாலிக்கிறார்.  

தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்று ,  இவர் நிறம் மாறுவது பேரதிசயம் .....

சிதிலமடைந்து பூசை புனஸ்காரங்கள் நின்று போயிருந்த இத்திருக்கோயிலை, கிராம மக்கள் அரும்பாடு பட்டு புனரமைத்து , தற்போது 2 காலங்கள் நித்திய பூசைகள் நடைபெற்று வருகிறது ....

இங்கு உறையும் பெருமான் தன்னை நாடுவோர்களுக்கு , இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் , அனைத்து நலன்களையும் அள்ளி  தர தயாராக உள்ளார் ....பெற்று வர நீங்கள் தயாரா? 

இங்குள்ள குழந்தை ஈஸ்வரர் சந்நிதியில் வேண்டுபர்களுக்கு மழலை பாக்கியம் சித்திக்கும் ..

எங்கே உள்ளது ?

திருவள்ளூர் ---redhills  சாலையில் ஈக்காடு பேருந்து நிறத்திலிருந்து கூப்பிடு தூரம் தான் ...அல்லது தாமரைப்பக்கம்  கூட்டு ரோட்டிலிருந்து  திருவள்ளூர் செல்லும் சாலையிலும் செல்லலாம் ,,,,







No comments:

Post a Comment