Tuesday, June 28, 2016

கனவில் வந்து கட்டளை இட்டார் மீனாக்ஷி ....சிரமேற்கொண்டர் மாமுனி பரஞ்சோதியார் ..

மீனாக்ஷி அம்மனின் கட்டளை படி திருவிளையாடல் புராணம் எழுதிய பரந்ஜோதிமுனிவர்...  3363 செய்யுளை கொண்டது  இப்புராணம் ...

மதுரையை பற்றிய நான்மாடக்கூடல் புராணம் இயற்றியவரும் இவரே.... 
பிறந்த ஊர் வேதாரண்யம்..

தமிழுக்கும் , ஆன்மீக வளர்ச்சிக்கும் எண்ணற்ற  சேவை  புரிந்த இந்த தவ சித்தர் பற்றி எவ்வளவு பேர் அறிவீர்கள்? இவர் தன் இறுதி காலத்தை திருவாரூர் அடுத்த  சேகல் மடப்புரம் என்னும் கிராமத்தில் கழித்தார்....
இங்கு மடம் ஏற்படுத்தி தொண்டு செய்து வந்தார்.

 திருத்துறைபூண்டிto நாகப்பட்டினம் ECR சாலை பாமணி லிருந்து உம்பளச்சேரி செல்லும் சாலையில் சேகல் மடப்புரம் அமைந்துள்ளது ....

இங்கு அவருக்கு ஜீவ சமாதியும் அமைந்துள்ளது .....அருகிலேயே இவர் வணங்கி வழிபட்ட பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது ....

சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் வல கண்ணாகவும் இம்மகான் இயற்றிய திருவிளையாடல் புராணம் இட கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் நெற்றி கண்ணாகவும் சான்றோர் பெருமக்களால்  இன்றளவும் மதிக்கப்படுகிறது ....

இத்துணை பெருமை வாய்ந்த இம்மகானை ,பரஞ்சோதி மாமுனிவர் மீது எல்லையற்ற அன்பு கொண்ட
மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மு .பரமசிவம் (9698943397) வியாழன் தோறும் அப்பெருமானுக்கு சிறப்பு பூசைகள் செய்து , அங்குள்ள மக்களை ஒன்றிணைத்து தேவார திருவாசக முற்றோதல் போன்ற பணிகளை செய்து வருகிறார் ...அன்ன  தானமும் உண்டு .....
இத்திருக்கோயிலும் , பரஞ்சோதி முனிவரின் ஜீவ சமாதியும் திருப்பணி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது ..அன்பர்களே....

திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ள அன்பர்கள் தங்களை இணைத்துகொண்டு முனிவரின் அருள் பெற வேண்டுகிறோம்
சிவபீடம் 9443390589
கோவில் திருப்பணி குழு செல் நம்பர்கள்
99428 70490
96986 52198
96989 43397



No comments:

Post a Comment