Wednesday, June 22, 2016

தண்டலை நீள்நெறி ----திருவாரூர் திருத்துறைப்பூண்டி 
சாலையில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் ..
இறைவன் திருநாமம்  ஸ்திர புத்தீஸ்வாரர் எனப்படும் நீள்நெறியப்பர் .....தன்னை வணங்குபவர்களுக்கு நல்ல ஸ்திரமான நற்குணங்களை அருள்பவர் என்று பொருள்..

அரிவாட்ட நாயனார் செந்நெல் , மாவடு கீரை கொண்டு தினசரி நெய்வேத்தியம் செய்து வழிபட்ட தலம்
கோச்செங்கட்சோழன் நோய் தீர்த்த தலம் .
அம்மன்னன் கட்டிய மாட  கோயில்களுள் இதுவும் ஒன்று 
நூபுர கங்கை எனும் தீர்த்தம் உள்ள தலம் 
ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலம் 
உச்சி கால பூசைக்கு வர முடியாமல் போனதற்காக அரிவாட்ட நாயனார் தன் கழுத்தை தானே அறுத்து கொள்ள முயற்சித்த போது , பூமியிலிருந்து இறைவன் கை நீண்டு ,நாயனாரை தடுத் தாட்கொண்ட தலம்.

இத்தலத்தை பற்றி பாடி ,இறைவன் அருளால் தினசரி ஒரு பொற்காசு , படிக்காசு நாயனார் பெற்ற தலம் 
புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் வணங்கிய தலம் .

இன்னும் ஏராளமான பெருமைகள் இத்தலத்திற்கு உண்டு ...
இத்தலத்தை வணங்கிய முனிவர்களும் ஏராளம் ..அவர்கள் வணங்கிய திருமேனிகள் பிரகாரத்தில் உள்ளன .

விவசாயிகள் தங்கள் நிலத்தை பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செயகிறார்கள் ..
அவ்வாறு செய்தால் பயிர் நன்கு செழித்து வளரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது ...

குஷ்ட நோய் தீர்க்கும் தலமாகவும் இது விளங்குகிறது .....

இத்தகைய பெருமைகளை பெற்றிருந்தும் , பக்தர்கள் வருகை இன்றி திருக்கோயில் வெறிச்சோடி கிடக்கின்றது ..

நாயனாரும் அவர் மனைவியும் .....


No comments:

Post a Comment