Friday, June 24, 2016


வறுமையில் வாடுபவர்கள் வணங்க வேண்டிய 

திருக்கோயில் 

1974 லில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட தேவார பாடல் பெற்ற திருத்தலம் கிளியன்னவூர் ....

இன்று நாம் காண இருக்கும் திருத்தலம் இதுதான்.அகத்திய முனிவறால் உருவாக்கப்பட்டது .

சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் "கிளியன்னவூர்' என் அழைக்கப்படும் தலம். காலவ முனிவரும் வழிபட்டுள்ளார் . ஆதிசேஷன் வணங்கி நற்கதி அடைந்துள்ளான்.

வழிபடும் பக்தர்களின் கொடிய நோய்களை விரட்டி, வறுமையை போக்கும் பரிகாரதலமாக 
இத்தலம் விளங்குகிறது.


வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட அவர்கள் நோயிலிருந்து விடுபடுவர் .....
திருமண தடை , மழலை வரம் , கல்வி கேள்விகளில் முதன்மை பெறவும் இங்கு பிரார்த்திக்கலாம் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உள்ளது.



No comments:

Post a Comment