Monday, June 13, 2016


இயற்கையின் கொடை ,ஹிமாச்சல பிரதேசம் 

நாள்தோறும் இறைவனை நீராட்டும் நீர்வீழ்ச்சி....

அஞ்சனை தன் மகனான ஹனுமனை கருவுற்ற தலம் இது .


அந்த சமயம் அஞ்சனை வழிபட்ட இறைவன் இவர்...

இங்குதான் கோயில் கொண்டுள்ளார் அஞ்சனை மகாதேவர் .

இத்தலத்தை ஷோலங் பள்ளத்தாக்கிலிருந்து 20 நிமிட மலையேற்றத்தில் அடையலாம் .இங்கு வசிக்கும் ஏராளமான சாதுக்கள் நம்மை வரவேற்று , சிற்றுண்டி தந்து உபசரிக்கின்றனர்.

இயற்கையின் கொடையான இத்தலம், வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச்செல்கிறது .

மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் கீழ் இங்கே இறைவன் அருள்கிறார் . பனிபொழிவு காலங்களில் , இறைவன் மீது பனி படர்ந்து "அமர்நாத் " போல் இத்தலம் காட்சியளிக்கிறது.


சோலங் பள்ளத்தாக்கு குலு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி ....
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ளது .....


No comments:

Post a Comment