Sunday, June 12, 2016

பாரிவாக்கம் பெருமானுக்கு எப்போது வழி பிறக்கும்?

பாரிவாக்கம் .....சென்னை பட்டாபிராம் --பூந்தமல்லி மார்க்கத்தில் உள்ளது ....

இங்கு பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் தொலைபேசி ஆண்டெனா பின்புறம் சாய்ந்த நிலையில் இருக்கும் அழகான பெரிய லிங்க திருமேனி இவர். 
பூசை புனஸ்காரங்கள் ஏதும் கிடையாது ....

செடி கொடிகள் மண்டி கிடக்கின்றன ...அருகிலேயே காலை கடன்களையும் முடிக்கிறார்கள் ....
இவ்வூரில் மிகப்பழமை வாய்ந்த ஒரு சிவாலயமும் , அம்மன் திருகோயிலும் உள்ளது ..
அங்கேயே இப்பெருமானையும் பிரதிஷ்டை செய்வித்து தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யலாம் .

அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் மனிதர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள்.பெருமானின் நிலையும் இவ்வாறே தொடர்கிறது .. 
பேசாமல் இம்மாதிரி தனித்து விடப்பட்ட பெருமான்களுக்கென ஒரு தனி நல வாரியம் அமைத்து விடலாம் . தொடர்புக்கு - 9444352848



1 comment: