Thursday, June 9, 2016

இயற்கை எழில் கொஞ்சும் சந்நியாசி மலை ...



தன்னன் தனியாக வீற்றிருக்கும் இறைவன் ....சித்தர்கள் இன்றும் 

வழிபடும் அற்புதம்....எங்கே உள்ளது? வாருங்கள் தரிசிக்கலாம் .....


சென்னை பாண்டி இடையே சரியாக நட்ட நடுவில் அதாவது 

சென்னையிலிருந்து 76 கிலோமீட்டர்,   பாண்டியிலிருந்தும் 76 

கிலோமீட்டர் கல்பாக்கம் புதுபட்டினம் தாண்டியதும் வரும் வாயலூர் 

மதுராந்தகம் சாலையில் உள்ளது நெற்குணப்பட்டு கந்தசாமி 

கோவில், சன்யாசி மலை ...


நெற்குணப்பட்டு கந்தசாமி கோவில் – தொண்டை மண்டலத்தில் 

கடற்கரை நகரமாம் கல்பாக்கம் அருகே மலைகள் சூழ இருக்கும் எழில் 

கொஞ்சும் திருத்தலம். சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூருக்கு 

போவதற்கு முன், இத்தலத்து முருகனிடம் உத்தரவு பெற்றுச் 

சென்றாராம். ஒரு பெரிய கல்வெட்டு ஒன்று வெட்டவெளியில் 

கிடக்கிறது.இங்கு சன்யாசி மலை என்று ஒரு குன்று இருக்கிறது. இங்கு 

ஒரு லிங்கம் மலையுச்சியில் உள்ளது. பௌர்ணமிக்கு மலை வலம் 

வருதல் சிற்ப்பு. சித்த்ர்கள் வாழும் மலை.


கல்பாக்கம் – மதுராந்தகம் சாலையில் இத்தலம் உள்ளது. சுமாரான 

கிராமத்து சாலை. பேருந்து உள்ளது...

தற்போது மேற்கூரை அமைத்துள்ளார்கள்.


மக்கள் நடமாற்றம் அற்ற பகுதி என்பதால் ....கவனத்துடன் ஒரு குழுவாக சென்று வருதல் நல்லது ..


No comments:

Post a Comment