Sunday, June 5, 2016

மெய்யன்பர்களே ......

ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் ஒரு மிக பழமை வாய்ந்த, நம் கிராமங்களில் அமைந்துள்ள ,அதிகம் அறியப்படாத திருகோயில்களுக்கு செல்வதை நானும் என் கணவரும் வழக்கமாக வைத்துள்ளோம் ...
அந்த வகையில் சென்ற பிரதோஷத்தின்  போது   நாங்கள் சென்ற திருத்தலம் குடவாசல் வட்டத்தில் ,
குடவாசல் நன்னிலம் சாலையில் அமைந்துள்ள வடவேர் என்னும் கிராமம் .....இங்கு புராதனமான இரண்டு சிவஸ்தலங்கள் உள்ளன...
1. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருகோயில் .....
2.ஞானாம்பிகா சமேத ஞான சுந்தரேஸ்வரர் திருகோயில் ....

இந்த இரண்டு சிவஸ்தலங்களும் நேர் எதிர் எதிரே பிரதான சாலைக்கு இருபுறமும் அமைந்துள்ளது .

முதலாவது திருகோயில் செப்பனிடப்பட்டு மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .....
இரண்டாவது மிக பழமை வாய்ந்தது .....திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது ...

சுற்றிலும் சேங்காலிபுரம் , அருவிழிமங்கலம் , தடுத்தாட்கொண்டபுரம் போன்ற கிராமங்கள் உள்ளன ...
இங்கெல்லாமும் புராதனமான திருகோயில்கள் காணப்படுகின்றன ...

சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் இந்த சிற்றூரில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டது வெறும் 3 பேர்தான் ..
அம்மன் கோயில் , ஐயனார் கோயில்களும் உள்ளன ....இங்கெல்லாம் விழாக்கள் என்றால் சில நூறு பேராவது 
கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள் ....
ஆனால் பிரதோஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்ய ஏன் வருவதில்லை?

என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி ......
பதில் தான் இல்லை ......

அர்ச்சகர் அலைபேசி எண் : 9150189365
சுரேஷ் குருக்கள் ...

இவர் அருகில் உள்ள அருவிழிமங்கலம் என்ற கிராமத்திலிருந்து வருகிறார்,




No comments:

Post a Comment