Tuesday, May 31, 2016

புறக்கணிக்கப்படும்  புராதன திருகோயில் --ராமஞ்சேரி 

அன்பர்களே .....ராமஞ்சேரி என்று ஒரு இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் ,பூண்டி தாலூகாவில் உள்ளது ....திருத்தணி செல்பவர்கள் கவனித்திருக்கலாம் ...அங்கு மிக பழமையான திருகோயில் ஒன்று ....மகாவிஷ்ணுவால் வழிபடபெற்றது ...இறைவனை மகாவிஷ்ணு வழிபடும் அபூர்வ திருகோலம் ....மூலவருக்கு பின்புறம் தான் நாம் கருவறையில் காணமுடியும் ....

கருவறையிலேயே மூலவரை மகாவிஷ்ணு வழிபடும் இத்தகைய தோற்றம் மிக அரிது ....
சைவ வைணவ ஒற்றுமைக்கு வழிகாட்டும் இத்தலம் சில ஆண்டுகள் முன்பு நான் சென்றிருந்த போது பிரதோஷ வழிபடு கூட நடைபெறாமல் பூட்டியே காணப்பட்டது ....

எத்தகைய  அற்புதமான் தலங்களை எல்லாம் நாம் இழக்கிறோம் என்று எண்ணும்போது மிக வேதனையாக இருக்கிறது ...
அன்பர்களே...தற்சமயம் இத்திருகோயில் எவ்வாறு உள்ளது ? பூசைகள்  நடைபெறுகிறதா? பக்தர்கள் வருகின்றனரா? என அறிந்து கொள்ள ஆவல் .....திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பர்கள் யாரேனும் உதவினால் மிகவும் நன்றாக இருக்கும் .......

அருகில் உள்ளவர்கள் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார்கள் ...


No comments:

Post a Comment