Thursday, May 5, 2016

நிதி  பற்றாக்குறையால்  நின்று  போன  சிவாலய திருப்பணி 

அன்பர்களே.....பொன்பேத்தி 
மிக வித்யாசமான  பெயர் கொண்ட  இந்த கிராமம் பாபநாசம்  வட்டம் ,தேவார பாடல் பெற்ற  திருபுறம்பியம் அருகில் உள்ளது ..

இதன் அருகில் உள்ள மற்றொரு தலம் சிவராத்திரி தலமான திருவைகாவூர் .....

இங்குள்ள பவானீஸ்வர சுவாமி திருகோயில் குடந்தை ஜோதிமலை இறைபணி மன்றத்தினரால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட ஒரு அற்புத தலமாகும் .....

கருவறையில்  பெருமான்  பத்மபீட ஆவுடையார் மீது அழகாக ஆரோகணித்துள்ளார் 

பெருமான்  கேட்டதை  கேட்ட மாத்திரத்தில் அருள்பவர் என சிலாகித்து சொல்கின்றனர் கிராம மக்கள் ....

இவருக்கு  செய்யப்படும்  அபிஷேகங்கள் காவேரி நதியில் நேராக சென்று  கலந்து  அதை  இன்னமும்  புனித படுத்துகிறது .....
அந்த அளவிற்கு நதியின் கரை ஓரத்திலேயே அமைந்த திருகோயில் 
...

ஆனால்  நிதி பற்றாக்குறையினால் திருகோயில்  இன்னமும்  முடிவுபெறாத  நிலை ......

நந்திஎம்பெருமான்  சிதிலமடைந்துள்ளதால்  கிராம  மக்கள்  தற்போது பிரதோஷ வழிபாட்டில்  கூட  கலந்து  கொள்வதில்லையாம் ....

எனவே அன்பர்களே ....நந்திஎம்பெருமான்  புதிதாக  செய்யப்பட வேண்டும் ...மற்றும்  திருகோயில்  முற்று பெற வேண்டும் ..
சிவாலய  திருப்பணி என்பது  எளிதில்  கிடைக்ககூடிய  பாக்கியமல்ல ...அன்பர்களே  ....

திருகோயிலை  கவனித்து வரும்  அடியார் சகோதரர் திரு குருமூர்த்தி  அவர்களின்  அலைபேசி  எண் தந்துள்ளேன் ...
நீங்கள்  அவரை  தொடர்பு  கொண்டு இத்திருக்கோயில்  தரிசனம் பெறலாம் ....

திருபணியிலும்  பங்கு பெறலாம் ....

GURUMOORTHY : 9585152811

இத்திருகோயிலுக்கு  திருபுறம்பியம் வந்து  நடந்தே  கூட  சென்று  விடலாம் ....கும்பகோணத்திலிருந்து பேருந்து  வசதி உள்ளது .....



No comments:

Post a Comment