Friday, May 20, 2016

உத்தாணி  ஐராவதேஸ்வரர் ---பாபநாசம் 

அன்பர்களே  ,

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அடுத்து உள்ள உத்தாணி பேருந்து நிறுத்ததிலிருந்து நேர் எதிரே  அடர்ந்த ஒரு வன பகுதிக்குள் இத்திருகோயில் அமைந்துள்ளது .....

தற்போது பிளக்ஸ் போர்ட் வைத்துளார்கள்...

பாதுகாக்கப்பட்ட வன பகுதி  என்பதால், அஸ்பெஸ்டாஸ்  கூரை  வேய்ந்த  ஒரு  சிறிய  திருகோயிலில் இறை திருமேனிகள் அருள்புரிகின்றார்கள் .....

இறைவன் மிக பெரிய  அழகிய  திருமேனி ...வைத்த கண் வாங்காமல்  பார்க்கலாம் ...அத்தனை அழகு ....அன்னையும் அப்படியே ...

இங்கு  ஓயா மணி சித்தர் என்பவர் ஜீவசமாதி உள்ளது ....
இவர் இன்றும் இத்திருகோயில் வளாகத்தில் அருவமாக உள்ளார் என்று நம்பப்படுகிறது...பௌர்ணமிதோறும்  இவருக்கு  சிறப்பு வழிபாடுகள்  நடக்கிறது ..

இவரை வணங்குவதால் வாழ்கையில்  அனைத்து  துன்பங்களும் விலகி நிம்மதி பிறக்கிறது ....கஷ்டங்கள்  விலகுவதாக  நம்பிக்கையுடன் இங்கு வரும் பக்தர்கள் நினைக்கிறார்கள் ...

மேலும்  ஐராவதேஸ்வரரை  இங்கு வந்து வழிபடுவதால் திருமண தடை  விலகுகிறது ...தீராத  நோய்கள்  தீர்கின்றன ....

இவர்  இந்திரனின்  யானையான  ஐராவதம் தன் சாபம் நீங்குவதற்காக வணங்கிய  பெருமான் ...

நீங்கள்  சென்று  வணங்க  வேண்டாமா?  இன்னும் என்ன தாமதம் ? உடனே  புறப்படுங்கள்!!...




No comments:

Post a Comment