Sunday, May 1, 2016

சித்தம்  கலங்க வைக்கும் சிவபூரணி திருகோயில் 

அன்பர்களே ......,
இப்படிப்பட்ட  திருகோயில்களும்  நம்  நாட்டில்  தான்  உள்ளன . அம்பாள்  மரகதவல்லி  சிலையின் தலை  பகுதியில் மாபெரும் விரிசல் ..
இதுதான்  இப்படி என்றால் , நந்தி பகவானுக்கு தலையே இல்லை ....

மூலவர்  மாணிகேஸ்வரர்  கருவறை முகமண்டபத்தில், முற்றிலும்  இடிந்துள்ளதால் , எதோ தொங்கும் தோட்டம் அமைத்துள்ளது போல் செடி கொடிகள் முளைத்து அவை கீழ் நோக்கி தொங்கிகொண்டிருக்கின்றன ....

கருவறையின் நான்கு  பக்க சுவர்கள்  மட்டும் எதோ சத்தியத்திற்கு கட்டுபட்டார்போல்  சுவாமியை பாதுகாத்து வருகிறது ....
மூலவர்  மிக அழகான பத்ம  பீடத்தின் மீது அமர்ந்த திருமேனி ...
கம்பீரமான உருவம் ...

அன்பர்களே...இதுதான்  இன்றைய  சிவபூரணி திருகோயில் நிலை ...

எங்குள்ளது..?

குடந்தை -- திருபனந்தாள்  வட்டத்தில் , திருலோக்கி எனப்படும் அற்புத  தேவார பாடல்  பெற்ற தலத்தின் அருகாமையில் உள்ளது  சிவபூரணி என்ற  இந்த  கிராமம் .....

மகாலிங்கம் என்பவர் கோயில்  மெய்காப்பாளர் ....இவர் கோயில் பின்புறம் ஒரு வீட்டில்  வசிக்கிறார் ....இவர் முன்னாள் அண்ணா  திராவிட 
முன்னேற்ற கழக பேச்சாளர் ...
தற்போது  சிவபெருமானின் அடியவர்களில் ஒருவர்..

இவரை  தொடர்பு  கொண்டு எப்போதும்  திருகோயிலை தரிசிக்கலாம் ..

ஐந்து  தலை  நாகம் ஒன்று இப்பெருமானை வழிபடுவதாக இவர் கூறுகிறார் .... தற்போதும் அது  அங்கு தான்  மறைவாக  உள்ளதென்றும் கூறுகிறார் ...

பிரதோஷம்  மட்டுமே  தற்போது  நடைபெறுகிறது ....

contact no:  994 376 4463

No comments:

Post a Comment