Wednesday, May 18, 2016

திரு  கொருக்கை--  நாகை 


பலன் தரும்  பரிகார தலம் 


அட்ட  வீரட்டான தலம்  என்று புகழ் பெற்ற   எட்டு  தலங்களில் காம தகன  மூர்த்தியாக இங்கு  சிவபெருமான்  விளங்குகிறார் ...

தீர்த்தவாகு  என்ற  முனிவர்  இறைவனுக்கு திருமஞ்சனம்  செய்ய  கங்கையை வரவழைத்த தலம் இது .....

காமனை  எரித்த தலம் ...
இத்தலத்தை சுற்றியுள்ள  தலங்களும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதாகவே  அமைந்துள்ளது .....

அதில்  ஒன்று விபூதி குட்டை ...காமனை  எரித்ததால் இங்கு மண் விபூதியை போன்று வெண்ணிறமாக  காட்சியளிக்கிறது ....

திருமண  வரம்  வேண்டுவோர்  அம்மனுக்கு புடவை  சாற்றி  நேர்ந்து கொள்கிறார்கள் .....

ஆவுடையாரில்  தாமரை  மலர் உள்ளது .....

அன்பர்களே  நாம் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து அன்பு பாசம் பரிவு கிடைக்கவில்லை எனில் , இங்கு  வந்து காம தகன மூர்த்தியை  வேண்டிக்கொள்ளலாம் ....
இதனால் நாம்  விரும்பும்  நபரிடமிருந்து அன்பு பாசம் ,பிரியம் நமக்கு  கிடைக்கும் ...

மேலும்  பதவி  உயர்வு ,, உடல் பலம் மன பலம் ஆகிய  யாவும்  இங்கு வந்து  இறைவனை வணங்குவதால் கண்டிப்பாக  சித்திக்கும் ..
தீராத  கொடு நோய்  நீங்கும் ....

எங்கு  உள்ளது?

மயிலாடுதுறை --மணல்மேடு ---கொண்டல் மார்கத்தில்  கொருக்கை உள்ளது ....

மிக  பிரம்மாணடமான  திருகோயில் ....அனைவரும்  வணங்க  வேண்டிய  அற்புத  தலம் ...



No comments:

Post a Comment