Wednesday, May 4, 2016

மிக  பாழடைந்த   நிலையில்  பௌண்டரீகபுரம் திருகோயில்

சௌந்தர்யநாயகி  சமேத  சோமநாத சுவாமி 

அன்பர்களே,

திரைபடங்களில் வரும் பாழடைந்த மாளிகையை போன்று உள்ளே நுழையவே  அச்சம் தரும் விதத்தில் மிக  சிதிலமடைந்த  விதத்தில் உள்ளது  இந்த திருகோயில் ....

செடி கொடிகள் முட்புதர்கள் மண்டி ......எங்கும்  கற்குவியல் ...குப்பை கூளங்கள்  என வேதனை !!!!!!!

ஒரே  ஆறுதல்  கருவறையில்  விளக்கெறிவது மட்டுமே அர்ச்சகர் கைங்கர்யத்தில் ...

அன்பர்களே ...இதிருகோயிலுக்கு  அருகில் பக்கத்திலேயே அமைந்திருக்கும் அம்மன் கோயில்  நன்கு  பராமரிக்கபடுகிறது ...
ஆனால் இத்திருகோயில் புறக்கணிக்கப்பட்டு பல  ஆண்டுகளாக  கிடப்பில்  போடப்பட்டுள்ளது ....திருப்பணி  நிறைவேறவேயில்லை ..

பொது மக்களோ ஊராட்சி நகராட்சி என நிர்வாகங்களோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை ....

இருப்பிடம் :

குடந்தை --காரைக்கால்  சாலையில் உப்பிலியப்பன் கோயில்  தாண்டியதும் வரும் முருக்கன்குடி சாலையில் , முருக்கன்குடி  அடுத்து  உள்ளது ....

பிரதான  சாலையிலிருந்து 11/2 (ஒன்றரை) கிலோமீட்டர்  இடதுபுறம் பிரியும்  சாலையில் பயணிக்க வேண்டும் ....

இது  மிக சிறிய  கிராமம் தான் ...அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது .....

உழவார  பணி  மன்றத்தினர் கண்ணில்  ஏனோ  இந்த  கோயில்  படவில்லை ....உடனடியாக  திருப்பணி  நிறைவேற்றப்பட வேண்டிய  கட்டாயத்தில்  இத்திருகோயில் உள்ளது .....

அருகிலேயே தண்டம்தோட்டம் ,அம்மன்குடி என பல புராதனமான திருகோயில்கள் உள்ளன ..

ஆலய  அர்ச்சகர் :திரு  சோமநாதன் அலைபேசி :9843025248



No comments:

Post a Comment