Saturday, May 7, 2016

திருஆமாத்தூர்  விழுப்புரம்  

திருஆமாத்தூர்  நம்  கஷ்டங்கள் விலக ,  பிரச்சினைகள் அனைத்தும் தீர மிக சிறந்த  ஒரு பரிகார தலம் ...விழுப்புரம்  மாவட்டத்தில்  உள்ளது ...

பசு  வணங்கியதால்  இப்பெயர். ஆ என்றால்  பசு..இன்றும் பசுவின் குழம்பு பட்ட வடு இறைவன் மேனியில்  உள்ளது ...

எல்லா  திருகோயில்களிலும் இறைவன் சந்நிதியும் அம்மன்  சந்நிதியும் ஒரே கோவிலில் அமைந்திருக்கும் ....
இங்கு இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி தனி கோவிலாகவும் 
அம்மன் சன்னதி மேற்கு நோக்கி தனி கோவிலாகவும் உள்ளது ..

இறைவன் அபிராமேஸ்வரர் சுயம்பு மூர்த்தி ...
 இங்குள்ள வட்டப்பாறை  மிக விசேஷமானது .....
இதன்  முன்னால் அமர்ந்து  கொண்டு தான் ராமனும் சுக்ரீவனும் 
ராவணனை அழிப்பதற்கு , போர் புரிவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தல புராணம்  தெரிவிக்கிறது ......

முன்னர்  ஊர்  பஞ்சாயத் துகள் இந்த  வட்டப்பாறை முன்  தான் நடைபெருமாம்  ....
நீதி , நேர்மை தவறியவர்கள் இப்பெருமானால் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் , யாரும் இதன் முன்னால் போய் சொல்வதற்கு அஞ்சுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு ...



No comments:

Post a Comment