Wednesday, May 18, 2016

மாரச்சேரி நாகநாத ஸ்வாமி  திருகோயில்  
திருத்துறைபூண்டி...

திருமறைச்சேரி  என்பது புராண பெயர் ...
ஒரு காலத்தில்  வேதம்  ஓதும் அந்தணர்கள் நிறைந்த ஊராக விளங்கியதாம் ....

இங்கு சீரும் சிறப்புமாக  விளங்கிய நாகநாதஸ்வாமி திருகோயில்  இன்று இடிபாடுகளுடன்  கற்குவியலாக காட்சியளிப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும் ...

இத்தலம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி  செல்லும் வழியில் மணலி என்னும் பேருந்து நிறுத்ததிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது ...

கருவறையில்  அற்புத  அழகோடு காட்சியளிக்கும் இறைவனை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ....

அம்பாளும் அழகில் சற்றும் குறைந்தவள் அல்ல ...ஐந்தடி உயரத்தில் பேரழகாக விளங்குகிறாள் .....

என்ன...?  கண்டு களிக்கத்தான்  பக்தர்கள்  வருகை இல்லை ....

விரைவில்  திருப்பணி  துவக்க  கிராம  மக்கள்  மிக ஆவலாக  உள்ளனர் .....

நீங்கள்  எப்போது  சென்று  தரிசிக்க  இருக்கிறீங்கள் ?




No comments:

Post a Comment