Saturday, March 12, 2016

வையத்தில் ஓர் அரிய தலம் ---வைகல் 

தேவார பாடல்  பெற்ற  274 தலங்களில் காண்பதற்கரிய ஒரு தலம் வைகல் ...
மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிற்கும் பெயர் பெற்றது ....

எனினும்  அனைத்து தலத்திற்கும்  இல்லாத சிறப்பு ஒன்று இத்தலத்திற்கு  உண்டு.

அது  முக்கண் வடிவில் முத்தான மூன்று திருகோயில்கள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது , அதுவும் முக்கண் அமைப்பிலேயே ....

பிரதானமாக நெற்றி கண்ணாக விளங்குவது வைகல் வைகல்நாதர்  திருகோயில் ....தேவார பாடல் பெற்றது ...

இத்திருகோயிலின் இடது கண்ணாக இடதுபுறம்  விளங்குவது வைகல் பிரம்மபுரீஸ்வரர் திருகோயில் ....

வலப்புறம் வலதுகண்ணாக  காசி விஸ்வநாதர் திருகோயில் விளங்குகிறது ...

இம்மூன்று  திருகோயில்களையும் ஒருங்கே வணங்க வேண்டும் .....
ஆனால்  அன்பர்களே ...பக்தர்கள்  வருகை  மிகவும் குறைவு ....
அதுவும்  கால்நடைகளை  பாதுகாக்கும்  காசி விஸ்வநாதர் திருகோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது ...
இத்திருகோயிலுக்கு  பெருமளவில்  அன்பர்கள்  வருகை தந்து வைகல் நாதரின் , பிரம்ம புரீஸ்வரரின் ,விஸ்வநாதரின் அருளுக்கு  பாத்திரமாக வேண்டும் ...
இதவே  என் விருப்பம் ...
இத்திருக்கோயில்களின் மெய் காவலர்  அருகிலேயே உள்ளார்.


No comments:

Post a Comment