Saturday, March 12, 2016

வானளாவிய  கோபுரம் இல்லை கோட்டை கொடிமரம் இல்லை ...
நீண்டு நெடிதுயர்ந்த  மதில்கள் இல்லை .....இல்லை ....

இருந்தாலும்  திரளான மக்கள் சாரி சாரியாய்  வந்து  இவரை வணங்கி  செல்கின்றனர் ...

இங்கு உறையும் ஈசன்  அருள் பெற்று திருப்புகின்றனர்....
இப்படி ஓர்  திருகோயிலா?  
இறைவன்  ஆத்தீஸ்வரரை  பார்த்த மாத்திரத்தில், ஆனந்ததில் மனம்  திளைக்கிறது ....
பரவசம்  நிரம்பி  கண்கள்  நீரை  வார்க்கும்  .....அத்தனை  அதிர்வலைகள் ஈசன் சந்நிதியில் .....கூரை  மட்டுமே வேயபட்டிருக்கிறது ...வன சரகத்திற்கு  உட்பட்ட பகுதி  என்பதால் ....

எங்கே  இருக்கிறது  திருகோயில் ?
செங்கல்பட்டு  மாவட்டம் , மதுராந்தகம்  வட்டம் மேலவலம் பேட்டை  என்னும் கிராமம் ...இங்கிருந்து  சுமார்  அரை  கிலோமீட்டர்  காட்டுக்குள்  பயணிக்க வேண்டும் ....

சரியான முறையான பாதை வசதி கிடையாது ...
அற்புதமான  இயற்கை எழில் கொஞ்சும்  இடத்தில்  கொலுவீற்றிருக்கிறார்
சுமார்  ஐந்தடி  உயரத்தில்  கம்பீரமாக  ஆத்தீஸ்வரர் ..
இறைவி அறங்காத்த நாயகி ...

அன்பர்களே  வாழ்வில்  ஒருமுறையேனும்  நம் புற கண்ணால்  ஆத்தீச்வரரை  காண  வேண்டும் ....கைகளால்  ஒருமுறையேனும்  அவரை  தொழவேண்டும் ....நம்  பிறவி பயன்  அது ...






No comments:

Post a Comment