Saturday, March 5, 2016

சிவராத்திரி நன்னாளில்  சிறப்பான  திருகோயில் தரிசனம் ...

அன்பர்களே ...பழமையான  திருத்தலங்களின்  பராமரிப்புக்கு  உதவுங்கள் ...
பெறற்கரிய  திருகோயில்களை  பாழடைந்து விட்டது  என ஒதுக்காதீர்கள் ...ஒருவகையில்  அதற்கு  நாமே  காரணம்....

குத்தாலம்  சுந்தரேஸ்வர பெருமான் திருகோயில்...
குத்தாலம் அடுத்த ஷேத்திரபாலபுரம் என்னும் இடத்தில்  உள்ளது ..
சுமார்  ஆயிரம்  ஆண்டுகள்  பழமையானதாக தெரிகிறது ...
தல வரலாறு என்று எதுவும்  அறிந்து கொள்ள இயலவில்லை .....

வரும்  சிவராத்திரி அன்று பழமையான  இத்திருகோயில் தரிசனம் பெறுவோம் ...

இத்திருகோயில்  குடந்தை  மயிலாடுதுறை  பிரதான சாலையின் ஓரத்திலேயே  அமைந்துள்ளது ...
மிக  சிதிலமடைந்த இத்திருகோயிலின் திருப்பணி தற்போது  முழு வீச்சில் நடைபெற்று வருகிறது ....
கருவறையில்  பெருமான்  அற்புத  அழகோடு கம்பீரமாக  வீற்றிருக்கிறார்..

கருவறையின்  பின்புறம் மேலும்  நான்கு  லிங்கத்திருமேனிகளுக்கு  தனி தனியே  சன்னதி அமைந்துள்ளது ....
அவைகள்  முறையே , குபேரன் , வாயு, யமன் மற்றும் நிருதி வழிபட்ட லிங்க திருமேனிகளாகும்..


No comments:

Post a Comment