Sunday, March 27, 2016

பலன்  தரும்  பரிகார தலம் -குரங்கணில் முட்டம் 

சிவ பக்தனான வாலி (குரங்கு) வழிபட்டதால் வாலீஸ்வரர் என்பது இறைவன் திருநாமம்...
அணில் மற்றும் எமன் காக்கை (முட்டம்) வடிவில்  வழிபட்டு சாப விமோசனம்  பெற்றதாக  தல வரலாறு சொல்கிறது ...
எனவே குரங்கணில் முட்டம் என வழங்கலாயிற்று..

தீர்த்தம் :காக்கைமடு தீர்த்தம் ....

காஞ்சிபுரம் --வந்தவாசி  சாலையில்  தூசி அடுத்து இரண்டு கிலோ மீட்டரில் இத்திருகோயில் உள்ளது ...பேருந்து வசதி குறைவு ..
எனவே ஆட்டோவில் செல்வது நலம் ...

தேவார  பாடல் பெற்ற தலம் ..இறைவி இறையார் வளையம்மை...
சித்திரை  மாதத்தில் ஆதவன் குறிப்பிட்ட  நாட்களில்  இறைவனை  வழிபடுகிறான் .....

இங்கு வந்து  வழிபட , கல்வி கேள்விகளில்  ஞானம் பெறலாம் ....
முக்தி ஸ்தலம் .....இறைவிக்கு வளையல் வாங்கி  கொடுத்து  நேர்த்திகடன் செலுத்துகின்றனர் ...அவ்வாறு செய்தால்  சுக பிரசவம் ஆகும் ...மழலை பேரு கிட்டும் ...

அடியார்கள்  அவசியம்  வணங்க  வேண்டிய திருகோயில் ....


No comments:

Post a Comment