Tuesday, March 15, 2016

திருமறைசேரி  என்கின்ற  மாரச்சேரி --மணலி  திருத்துறைபூண்டி 
அன்பர்களே....,
ஒரு  காலத்தில்  வேத விற்பன்னர்கள் ,பண்டிதர்கள் நிறைந்த ஊராக  இருந்திருக்கக்கூடும்..மறை  என்றால்  வேதம்  என்று பொருள். 
இங்கு  பன்னெடுங்காலமாக கோயில்  கொண்டுள்ளார்  வேதத்தின்  விழுப்பொருளான  இறைவன் ..திருப்பெயர் நாகநாதர் ....

ஒருகாலத்தில் மிகப்பெரிய  திருகோயிலாக  விளங்கியிருக்கவேண்டும் ...
இன்றோ  சில  இடிபாடுகளே  எஞ்சியுள்ளது ...

இத்தனை  சிதிலங்களுக்கிடையேயும் இறைவன்  சாந்நித்தியம்  சிறிதளவும்  குன்றாமல் பேரழகோடு காண்போர் வியக்கும்  வண்ணம் 
கருவறையில்  வீற்றிருக்கிறார்...

இறைவி சுந்தர  நாயகியோ   அற்புத  அழகோடு  சுமார்  ஐந்தடி  உயரத்தில் கம்பீரமாக  கொலுவிருந்து நம்மை  கொள்ளை கொள்கிறாள் ...
இத்திருகோயிலை  கட்டிய  பேரரசர்கள்  காலத்தில்  எப்படியெல்லாம்  இருந்திருப்பார் ? எத்தனை  விழாக்கள்  கண்டிருப்பார் ? இன்று ......?

அன்பர்களே  இத்திருகோயில்  குடந்தை  ஜோதிமலை இறைபணி  மன்றத்தினரின்  பேருதவியோடு  பாலாலயம்  செய்யப்பட வுள்ளது ..

திருப்பணி  ஆரம்பிக்கப்பட உள்ளது ...இத்திருகோயில்  தன்  பழைய  பொலிவை  பெற  அடியார்  பெருமக்களாகிய  உங்கள்  அனைவரின்  ஒத்துழைப்பும் பங்களிப்பும் தேவை ...
பரமனின்  திருப்பணிக்கு  அனபர்களே ........ஒரு செங்கல்லை  வழங்கினாலே உங்கள்  பல தலைமுறையினர் வாழ்வு  வளம் பெரும் ...
என்பதில்  சந்தேகம்  இல்லை ..

எங்கிருக்கிறது ?.....
இத்தலம்  திருத்துறைபூண்டி --திருவாரூர்  மார்கத்தில் மணலி  என்ற  பேருந்து  நிறுத்தத்திலிருந்து  சுமார்  ஓன்றரை  கிலோ மீட்டர்  தூரத்தில்  உள்ளது ...
தொடர்புக்கு : திரு  வேதையன் 
அலைபேசி  எண் : 904 746 7639 , 7708240152






No comments:

Post a Comment