Sunday, March 20, 2016


அகிலம்  போற்றும்  ஆத்தூர்  திருகோயில்கள் 


ஆத்தூர் வடபாதி ஆதிசக்தி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்"..செங்கல்பட்டு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாற்றின் கரையில் அமைந்து உள்ளது.

இத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கியுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ள ஈசன் "உடல்நோய் தீர்ப்பார்' என்பது ஐதீகம்.

மேலும் காதல் தம்பதிகள் தங்கள் மனம் போல் மணவாழ்க்கை அமைய ஆத்தூர் வடபாதி சிவாலயம் வந்து பங்குனி உத்திர நன்னாளில் ஈசன் அம்பாள் திருக்கல்யாணம் கண்டால்,மணவாழ்க்கை நலமாய் வளமாய் அமையும்.

இத்தலம் அருகிலேயே ஆத்தூர் அறம்வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயில்,சீட்டனாம்சேரி காலீஸ்வரர் திருக்கோயில் ,ஒரக்காட்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோயில்கள்  அமைந்து உள்ளன.

ஆலயதொடர்புக்கு:9445128054.


No comments:

Post a Comment