Wednesday, March 23, 2016

அழிவின்  கோர  பிடியில்  அன்னுகுடி  ஆலயம் .......

அன்பர்களே ...
மிகச்சிறிய  கிராமத்தில்  கூட  எவ்வாளவு  அற்புதமான  ஆலயங்கள் நமது  முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது ....

நாம் தான் அவற்றின் அருமை பெருமைகள் தெரியாமல், தரிசிக்க  கூட  நேரமில்லாமல்   காலத்தை  வீணே  கடத்திகொண்டிருக்கிறோம் .....

அன்னுகுடி  தஞ்சை -குடந்தை  மார்க்கத்தில்  பாபநாசம்  வட்டத்தில் உள்ள 
ஒரு சிற்றூர் .

ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .......
அதில் அன்னுகுடியும்  ஒன்று..ஜெகன்னாத பரமேஸ்வரர் --இறைவன்  திருப்பெயர் ...திருமாலின் பெயரை தாங்கிய  இத்தகைய  பெயர்  மிக அரிது ......இறைவி  அபிராமி .....
இறைவன்  மேற்கு  நோக்கியும்  இறைவி  கிழக்கு  நோக்கியும் உள்ள தலங்கள் 
வெகு குறைவு ...அபூர்வம் .....இத்தகைய  திருகோயில்கள் மிகசிறந்த பரிகார தலங்கள்  ஆகும் ...

கையில்  வெண்ணையை  வைத்துகொண்டு  நெய்க்கு  அலைவது  போல் ,
நமது  பிரச்சினைகளுக்காக எங்கெங்கோ  அலைகிறோம் ....
அன்பர்களே ,  மிகுந்த  ஆக்கிரமிப்பின்  பிடியில்  உள்ள திருகோயில் 
பிரதோஷ தினத்தன்று  நான்  சென்றபோது  பகலவனும்  தன்  பொற்கிரணங்களால்  இறைவனை  வழிபட்டார் ....

நீங்கள்  வழிபடுவது  எப்போது ? காலம் கடந்து விடும் .......முன்னரே சென்ற  
ஸ்ரீ  ஜெகன்னாத பரமேஸ்வரரின் அருளுக்கு பாத்திரமாகுங்கள்....
அவர் திருகோயிலை  சீர் செய்ய  உதவுங்கள் ..... 
(பகலவன்  வழிபடும்  திருக்காட்சி)



No comments:

Post a Comment