Sunday, March 27, 2016

பரிதாப  நிலையில்  பாலையூர்  திருகோயில் ......

அன்பர்களே!!! வழிபாடு நடைபெறாத , பூசைகள் நித்யானுஷ்டங்கள் அறவே  நின்று  போன  திருகோயில்கள் சிலவற்றை   என்னால் முடிந்த அளவிற்கு உங்கள்  கவனத்திற்கு கொண்டு வருவதே என்னுடைய  நோக்கம் ....

உங்கள்  பார்வைக்கு  வரும் இத்தகைய  திருகோயில்களுக்கு விளக்கேற்ற சிறிதளவவேனும்  எண்ணெய் வங்கி  தந்து, உதவுங்கள் ....
இந்த கைங்கர்யம் உங்கள் குடும்பத்தை கவசம் போல் பாதுகாக்கும் .

அப்படிப்பட்ட,  காலத்தின் கோலத்தால் நலிவடைந்த   ஒரு கோயில் தான்  பாலையூர் ....எங்குள்ளது?
குடந்தை -காரைக்கால் சாலையில் S.புதூர்  தாண்டியதும், வளையும் பிரதான சாலையிலேயே நீங்கள் இத்திருக்கோயிலை பார்த்திருக்கலாம் ..
மிஞ்சியிருப்பது  வெறும் இடிபடுகளே ....அம்மன் சந்நிதி இடிபாடுகளில் சிக்கியுள்ளது ...ஆக்கிரமிப்பும் உள்ளது .....
இறைவனை மட்டும் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரையில் தற்போது வைத்துள்ளார்கள் ..

வழிபாடுகள்  நடைபெறுகிறதா ? என்பது தெரியவில்லை !அது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .....



No comments:

Post a Comment