Thursday, March 17, 2016

ஆந்தகுடி  என்கின்ற ஆனந்தகுடி --மயிலாடுதுறை 

இங்கு  பல்லவர்  காலம்  முதல்  சோழர்கள்  காலம்  வரை  நன்கு  பராமரிக்கப்பட்டு வந்த  இந்த சிவாலயம்  இன்று  அழிவின்  பிடியில்  சிக்கியுள்ளது ....பெருமானும்  நந்தியும் , அம்பாள்  மட்டுமே உள்ளனர்.
ஒருகாலத்தில்  தேரோடும்  வீதியும் , திருக்குளமும் , மதில் சுவர்களுமாக  விளங்கிய  இந்த திருகோயில், இன்று  கூரையில்  வைத்து  பராமரிக்கும்  நிலையில்  உள்ளது ....

இத்திருகோயில்  இறைவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த  விக்கிரம சோழன் , தனக்கு இன்னல்  ஏற்படும்போதெல்லாம் இந்த இறைவனை வணங்கி , அவற்றை  போக்கி கொண்டுள்ளான்...தன தந்தையின் மனநோய் பீடித்திருந்தபோது , இந்த இறைவனுக்கு  அபிஷேகம்  செய்து நோயிலிருந்து 
மீட்டான் ......
இப்பெருமானுக்கு அபிஷேகம்  செய்த  விபூதியை உடலில்  பூசி வர  
உடல் நோய்  உள்ளத்து  நோய் எதுவாக இருந்தாலும்  நீங்கும் ....
இது  இன்றளவும்  கண்டு  வரும்  உண்மை ...

இந்த ஆலயத்தை  சீரமைக்க  சிவாலய  சேவா சங்கம் , மற்றும்  கிராம வாசிகள் முயற்சி செய்து வருகின்றனர் ...

மூலவர்   ஆனந்தபுரீஸ்வரர்  நன்கு இறுகிய  கரும்பச்சை நிறத்தினை உடையவர்.. சூரிய  ஒளி  படும்  விதத்தில்  கோயில்  அமைந்திருக்கிறார்கள் ...
இங்குள்ள குளத்தில்  மூழ்கி , இறைவனை  48 தொடர்ந்து  வழிபட ,திருமண தடை , வேலையின்மை , மழலை  பாக்கியம் இன்மை நீங்கும் ....

இன்னும் பல  நற்காரியங்கள் ஈடேறும் .......
சுற்றிலும்  பல  திருகோயில்களும் , திரு அன்னியூர் ,நீடூர் போன்ற  தேவார  தலங்களும்  அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த  இந்த  திருகோயில் முழுமை  பெற  தங்கள்  உதவியும்  தேவை .....

முகவரி  மற்றும்  தொடர்பு  எண் தந்துள்ளேன் ......விஜயம்  செய்யுங்கள் ...
திருப்பணிக்கு  உதவுங்கள் ......

முகவரி :
சிவாலயா  சேவா சங்கம் ,
ஆனந்த குடி  பாண்டுர்  அஞ்சல் ....
மயிலாடுதுறை  வட்டம் 
நாகை  மாவட்டம் 609203

எம் .பிச்சை பிள்ளை
96555 92303



No comments:

Post a Comment