Tuesday, March 8, 2016

சிவராத்திரி  தரிசனம்  1 .

மூன்று  மூர்த்திகளின்  வடிவாக எழுந்த முக்கண்ணன் ....
நால்  வேத விழுப்பொருளானவன்....
பஞ்ச பூதங்களால்உருவான பிரபஞ்சத்தின்  நாயகன் ...
இயற்கையில்  விரும்பி உறைபவன் ...உளக்கிடக்கை  யாரால் அரிய இயலும்...?

அதனால் தான் தான் விரும்பி உறைய இந்த இடத்தை தேர்ந்தெடுத்தான் போலும்...

செடி கொடிகள் நிறைந்து கிடக்கும் அடர்ந்த கானகம் ...
அங்கே பிரம்மாண்டமாய் விழுதுகளை பரப்பி நிற்கும் மிக பெரிய ஆலமரம் ..
எளிதில் நெருங்க இயலாத அமைதியான இந்த சூழ்நிலையில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று  திருமேனிகளாய் ,ஏகாந்தமாக  எழுந்தருளியுள்ளான்  ஈசன் ......அருள்  மணம்  பரப்பிகொண்டிருக்கிறான்....சரி..
எங்கே? எப்படி செல்வது..?  யாரை தொடர்பு கொள்வது ? இது தானே உங்கள் கேள்வி?   

திருவாரூர் திருத்துறைபூண்டி  சாலையில் திருத்துறைபூண்டி அருகே உள்ளது  மணலி  பேருந்து நிறுத்தம் .....இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் மாற்று பாதையில் சென்று சற்றே அடர்ந்த  ஒரு காட்டின் நடுவே இம்மூன்று பெருமான்களையும் உளமார வணங்கலாம் .....வித்யாசமான ஒரு இறை அனுபவம் உங்களுக்கு கண்டிப்பாக கிட்டும் ....
அபிஷேக  சாமான்களை  வாங்கி சென்றால்  நீங்களே உங்கள் கையால் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்விக்கலாம் ...

அருகில் உள்ள அடியார் , அன்பு சகோதரர் திரு வேதையன்..அவர்களை முன்னரே தொடர்பு கொண்டு  செல்வது நல்லது . அவரின் அலைபேசி எண்கள்
+91 7708240152,  904 7467639.....


சொல்ல மறந்துவிட்டேனே ....?
தேவார  பாடல்  பெற்ற திருகாரவாசல், கச்சனம் ....திருகொள்ளிகாடு, திருக்குவளை  தலங்கள் அருகில் உள்ளன .....மறந்து விடாதீர்கள் ...









No comments:

Post a Comment