Thursday, March 17, 2016

திருகோயிலா? வௌவால்களின்  சரணாலயமா ?

அன்பர்களே!!!  எப்படி சொல்வது ? என்ன சொல்வது ? என்றே புரியவில்லை .....

குடந்தை ---நன்னிலம் ---குடந்தை நன்னிலம்  வழி நாகை செல்லும் பேருந்துகளில்  செல்லும் போது , செல்லும்  வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்திருக்கலாம் .....கவனிக்காமலும்  சென்றிருக்கலாம் .....
இந்த  பாழடைந்த  சிவாலயத்தை ....

இந்த சாலையில்  கூஹுர் மேல்நிலை பள்ளி அருகே  இத்திருகோயில் உள்ளது .....

இப்போது  விழுமோ ? எப்போது  விழுமோ ? எனும் நிலையில் சுற்று சுவர் ..எப்போதும்  மூடிய  கதவு ....மரத்தின் வேர்கள் ஊடுருவி சுவர்  எப்போது  வேண்டுமானாலும்  இடிந்து  விழலாம் .....
வௌவால்கள்  மட்டுமே  நிரந்தர பக்தர்கள் .....மற்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது வந்த செல்வது உண்டு .......

குப்பை  கூளங்கள்...செடி கொடிகள்  மண்டி கிடக்கிறது .....
உழவார  பணி மன்றத்தினர்  கண்ணிலும்  படவில்லை இத்திருகோயில் ...

மூடிய  கதவு  இடுக்கு  வழியே  தான் புகைப்படம் எடுத்தோம் ...
இறைவன்  அழகான  திருமேனி .....இந்த  மாகாமகத்திற்காவது இத்திருக்கோயில்  சீரமைக்கப்படும்  என எண்ணியிருந்தேன் ....
யார் கண்ணிலும்  படவில்லை ......மிக வருத்தமாக உள்ளது ....

அன்பர்களே  உங்கள்  கவனத்திற்கு கொண்டு வந்து விட்டேன் ....
இனி நீங்கள் தான் ........



No comments:

Post a Comment