Friday, March 11, 2016

பழமலைநாதர்-----மலையம்பாக்கம்
பழவினைகள் நீக்கும் பழமலைநாதர் தரிசனம் 
மாங்காடு தலத்திற்கு  அறிமுகம் தேவையில்லை....இங்கு ஒரு காலத்தில்  108 சிவஸ்தலங்கள்  இருந்தன....

ஆனால் இன்று  இங்கு பல திருமேனிகள் தனித்து விடப்பட்டு  பராமரிப்பின்றி இருக்கும்  நிலை துர்அதிர்ஷ்டவசமாக.....

அவற்றில் ஒன்று  மலையம்பாக்கம்   பழமலைநாதர் திருகோயில் ....பலகாலமாக  திருகோயில்  இன்றி  வழிபாடின்றி  இருந்த  திருமேனியை,ஆவுடையார்  சரி செய்யப்பட்டு தற்போது அழகான திருகோயில்  அமைக்கப்பட்டுள்ளது மெய்யன்பர்களால் ...மிகவும் 
மெச்சத்தக்க திருப்பணி ...
இங்கு சிவராத்திரி  மிக விசேஷமாக  கொண்டாடப்பட்டது ...
இறைவன்  பழமலைநாதர் காண்பதற்கரிய , மிகப்பெரிய  திருமேனி ..
மலையம்பாக்கம் .  மாங்காடு வழியாக  குன்றத்தூர்  செல்லும் வழியில் சிக்கராயபுரம் என்னும் இடத்தில  இறங்கி அரை கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் ...

அன்பர்களே  அவசியம் தரிசியுங்கள் ...தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் அனைத்தும் பகலவனை  கண்ட பனி போல்  மறைவதை  காணலாம் ...



No comments:

Post a Comment