Wednesday, October 28, 2015

காளிக்கு  திருமண  கோலம் காட்டிய தலம் ----

காளி ----குத்தாலம் -மயிலாடுதுறை 





அன்பர்களே இறைவன் அகத்தியருக்காக தன் திருமண காட்சி அளித்த அனேக தலங்கள் உள்ளன . ஆனால் இத்தலத்தில் காளிக்கு இறைவன் தன் திருமண காட்சி நல்கினார்.
எனவே இத்தலத்தின் பெயரே காளி என்றுஅழைக்கப்படுகிறது.
அபிராமி கோயில் பத்து என்றும் சொல்கிறார்கள்.
காளி திருத்தலம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஒருசிறியகிராமம்
மயிலாடுதுறையிலிருந்து வசதியாக சென்றுவர பேருந்துகள் உள்ளன.
இறைவன் திருகாமேஸ்வரர். இறைவிஅபிராமி , சுற்றிலும் உள்ளகிராம மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறாள். அபிராமி கோயில் என்றால் தான் கோவிலுக்கு வழியே சொல்கிறார்கள்.
அத்தனை பிரசித்தம் . மிக சிதிலமடைந்த இக்கோவிலை மிக நேர்த்தியாக சீரமைத்துள்ளனர் கிராம மக்கள் .

1 comment: