Friday, October 2, 2015



புராதனமான  பூந்தோட்டம் திருகோயில்--

திருவாரூர்  மாவட்டம்


























பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் திருகோயில்.திருப்பணியை மட்டுமல்ல 
பக்தர்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஆலயம் இது.

அன்பர்களே இவ்வழியே தான் நாங்கள் திருநள்ளாறு சென்றோம் .அங்கே கட்டுகடங்காத பக்தர்கள் வெள்ளத்தில் திருகோயில் நிர்வாகம் திணறுகிறது .

ஆனால் அகஸ்தீஸ்வரர் திருகோயிலிலோ விளக்கேற்றவும் ஆளில்லை. இது அற்புதமான குரு பரிகார தலம். இங்கே குரு பகவான்
12 ராசிகளின் மீதமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார். இவரை வழிபட
கல்வி கேள்விகளில் முதன்மை பெறலாம், திருமண தடை நீங்குவதோடு, மணமானவர்களுக்கு மழலை பாக்கியம் தந்தருள்கிறார் இவர்.

மேலும் இவரை வழிபட தொழில் ஏற்படும் மந்த நிலை நீங்கும்.அருளுடன் பொருள் வரவும் உண்டு.

இத்தகைய அற்புதமான திருகோயில்களை நாம் நிராகரித்தால்
அன்பர்களே, நஷ்டம் நமக்குத்தான்.சிந்தியுங்கள்

1 comment: