Saturday, October 3, 2015

நம்மை காண விரும்பி எழுந்தருளிய இறைவன் ..


அடியார் பெருமக்களுக்கு அன்பு விண்ணப்பம்.
சில தினங்கள் முன்பு குடந்தை வலங்கைமான், திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் ரெட்டை லிங்கேஸ்வரரை 
பதிவு செய்திருந்தேன்.
பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை இப்பகுதியும் சுற்றியுள்ள பகுதிகளும் மிகசிறப்பு பெற்று விளங்கி வந்தது..
இரண்டாம் புலிகேசி மற்றும் மாலிக்காபூர் படைஎடுப்பினால்
இப்பகுதியும் இங்குள்ள திருகோயில்களும் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது.
ஆயினும் நம்மைகாண விரும்பிய இறைவன் நமக்கு அருள்புரிவதற்காக , ஒருவராகஅல்ல, இருவராக இங்கு எழுந்தருளியுள்ளான். இங்குள்ளஇரட்டை லிங்கேஸ்வரர்களை வழிபட்டால், சந்தானப்ராப்தி கிட்டும். மாங்கல்ய தோஷம் நிவர்த்திஆகும். கடன் நிவர்த்தியாகும்.
அண்ட சராசரங்களையும் , இப்பூவுலகையும் நமக்காக படைதருளிய இறைவனுக்கு திருகோயில் ஒன்றைஅமைப்பது
நமதுகடமையல்லவா?
இதனை உயிர் மூச்சாக கொண்டு இந்த கிராமத்தை சேர்ந்த அன்பர்
திரு G. சங்கர்( மழலை செல்வம் இல்லாது வருந்திய இந்த அன்பருக்கு திருப்பணி ஆரம்பித்தவுடன்மழலை பாக்கியம் தந்தருளியுள்ளார் இப்பெருமான்) இப்பெருமானுக்கு எப்பாடுபட்டாவது திருகோயில் ஒன்றை எழுப்பிவிட வேண்டும் என்று சமய சான்றோர்களின் வழிகாட்டுதலின் பேரில் , சென்னையை சேர்ந்த திருப்பணிசெம்மல் திருமதி மகாலட்சுமி அவர்களின் பேருதவியோடு திருப்பணியை ஆரம்பித்துள்ளார்.
பேரன்பு கொண்ட பெரியோர்களே,
நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளபடியால் தங்களது மேலான ஆதரவை நாடுகிறார். தங்களது ஆதரவை:
SRI UNNAMALAI AMBIKA SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA ARAKATTALAI
A/C No. 500101010801777
IFSC CODE:CIUB0000022
CITY UNION BANK, VALANGAIMAN BRANCH
என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.
தொடர்புக்கு:
G.SANKAR, பொருளாளர் (94430 86587)
பஸ்ரூட்: குடந்தை--மன்னார்குடி திப்பிராஜபுரம்(மாடாகுடி) பஸ் ஸ்டாப்.இங்கிருந்து அரை கிலோமீட்டரில் சென்னியமங்கலம் உள்ளது.





1 comment: