Thursday, February 4, 2016

திருவிடைக்கழி, திருக்கடையூர் ,மயிலாடுதுறை 

இப்பூவுலகில் முருகப்பெருமான் பாதம் பதிந்தஇடம்இரண்டு....
ஒன்று வள்ளிமலை...மற்றொன்று திருவிடைக்கழி எனப்படும்
திருக்கடையூர் அருகில் உள்ள திருத்தலம்....
இத்தலத்திற்கு பல்வேறு சிறப்புகள்உள்ளது.....
இங்குள்ள குராமரத்தடியில் குகன் சிவபெருமானை வணங்கினார்....
















கருவறைக்குள் கருவறை என்னும் சிறப்புஉடையது
ஒரேகருவறையில் தந்தையுடன் தனயன் அருள்புரிகிறார்..
நவக்ரகங்கள் சன்னதி கிடையாது....
பிரதோஷ தினத்தன்று முருகனே திருஉலா காண்கிறார்...
இறைவன் பாப விநாசர் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார்..
முருகப்பெருமானே இத்திருகோயிலில் பிரதான இடம் பெற்றுள்ளார்...
இத்திருகோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆறு கிலோமீட்டரில் உள்ளது...



அன்பர்களே மேலும் இத்திருத்தலத்தில் அனேக அதிசயங்கள் உள்ளன .

இங்கு அம்பாள் சந்நிதி கிடையாது .
நவகிரங்கங்கள் கிடையாது .
இரண்யாசுரன் மகனான சூரபன்மனை கொன்ற பாபம் நீங்குவதற்காக , இங்கு முருகப்பெருமான் குரா
மரத்தடியில் இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார் .

திருவிசைப்பா பெற்ற தலங்களுள் ஒன்று.

நந்திஎம்பெருமானுடன் , முருகனுக்குரிய யானை வாகனமும் காணப்படுகிறது .
இத்திருகோயில் திருகடையூரிலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது
.

No comments:

Post a Comment