Tuesday, February 23, 2016

கங்கைக்கு நிகரான தீர்த்தம் ...காசிக்கு நிகரான 

தலம் ......




அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில், சின்ன நரிமேடு, எடையார்குப்பம் பண்ருட்டி தாலுக்கா திருவஹீந்திரபுரம் அருகில், கடலூர்.
ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. 
தென் கங்கை என நாவுக்கரசரால்போற்றப்பட்ட இப்பகுதியில் பாயும் கெடில நதியோ இன்று நீரின்றி வறண்டு முட்புதராக காட்சியளிக்கிறது .
கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். எளிய அலங்காரத்தில், அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார்.
பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு.
அருகேஉள்ளதிருவதிகையில் முப்புரம் எரித்த இறைவனார் இங்கு
கெடில நதியில் மூழ்கி தன வெப்பத்தை தனித்துகொண்டு, பூந்தோட்ட வனமாக திகழ்ந்த இத்தலத்தில், ஓய்வெடுத்ததாக தலபுராணம். எனவே இத்தலத்து இறைவன உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் வைத்தீஸ்வரராகவும், மருந்தீஸ்வரராகவும் இருந்து அருள்புரிகிறார்.





No comments:

Post a Comment