Wednesday, February 3, 2016

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், 

முழையூர் ,குடந்தை, தஞ்சாவூர்-மாவட்டம்.
குடந்தை--பட்டீஸ்வரம்  சாலையில் இத்தலம் உள்ளது .




















தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்தார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு "பரசுநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ள இந்த தலம் பாழ்பட்டு கிடந்தது. உள்ளூர் பக்தர் களின் முயற்சியால் ராஜகோபுரம் சீரமைக்கப் பட்டு, கோயிலுக்குள் உழவாரப்பணி நடந்துவருகிறது.
இங்கே ஒரு காலத்தில் மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.

No comments:

Post a Comment