Wednesday, February 10, 2016

காமரசவல்லி  அரியலூர்  மாவட்டம் 

பாலாம்பிகை  உடனுறை  சௌந்தரேஸ்வரர்  திருகோயில் 


கார்கோடகன்  பூசித்ததால் இறைவன் திருநாமம்  கார்கோடேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார் ....
இறைவன் வாரி வாரி வழங்கும்  வள்ளல்  என்பதால் வள்ளலார்  கோயில்  என்றே அழைக்கப்படுகிறது ...
பிருங்கி  மகரிஷி  வணங்கிய தலம் 
கடக ராசிக்காரர்கள் வணங்க  வேண்டிய தலம்
ரதி  தேவிக்கு  மாங்கல்யம்  அளித்ததால்  மாங்கல்ய  தோஷம் நீக்கும் தலம்..
நாக தோஷம்  நீக்கும் தலம் ....
திருமண தடை , ஆண் வாரிசு இன்மை , தம்பதிகள்  பிரிவினை , குடும்பத்தில் அகால மரணம் , உத்தியோக தடை , கல்வி அறிவு பாதிக்கப்படுதல்
இவை அனைத்தும்  நீங்க  வணங்க வேண்டிய தலம் இது ....

குடந்தை  மகாமக  குளம் போல்  திருகுளத்திற்க்குள்  இங்கு  பல  தீர்த்தங்கள்  அமைந்துள்ளது ....நீராடுவது  மிக சிறப்பு..

ரதிதேவிக்கு  காமனை  உயிர்பித்து  தந்ததால்  இறைவிக்கு  காமராதிவல்லி  என்று பெயர்...
இன்றும்  ஒவ்வொரு  மாசி மாதம்  பௌர்ணமி  தினத்தன்று காமன்  பண்டிகை  நடத்தப்படுகிறது ..
இத்திருகோயிலில்  தினசரி  சேவை  செய்பவர்கள்  தீராத  வினை தீரும் ..
இது  கோவில்  கோபுர  முகப்பிலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த  இறைவன் புரிந்த திருவிளையாடல்கள்  கணக்கற்றவை ...இன்றும் ...





























இத்தகைய  சிறப்பு  வாய்ந்த இந்த திருக்கோயில்  நாளடைவில்  நலிவுற்றது ...

தற்போது  பெரிய அளவில்  திருப்பணி  மேற்கொள்ளப்பட்டு திருகோயில் குடமுழுக்கு  செய்யப்பட்டுள்ளது ....

தொடர்புக்கு :  திரு  M. Kamaraj
cell:9787353895

No comments:

Post a Comment