Thursday, July 7, 2016


வானமே கூரையாக ...விடம் உண்ட கண்டன் .....

விஷமுண்ட நாயகி சமேத விஷமுண்டேஸ்வரர் திருக்கோயில் .....இலுப்பூர் மடப்புரம் கிராமம் ..
திருத்துறைப்பூண்டி தாலூகா .....திருக்கொள்ளிக்காடு அருகில் ...

மஹாலக்ஷ்மி வழிபட்ட திருத்தங்கூர் திருக்கோயிலுக்கும் , திருகொள்ளிக்காட்டிற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ளது ...

சித்தர்கள் , ஞானிகள் , மகான்கள் பலர் வழிபட்டுள்ள இத்தலம் இன்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளது.  கோயில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது ....கூரையில் அம்பாள் , பைரவர், சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காணப்படுகிறது ....

காரைக்கால் அம்மையாரை நினைவு படுத்தும் விதமாக வயதான மூதாட்டி ஒருவர் இத்திருக்கோயிலை 
விளக்கேற்றி சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறார்....

வயதான நிலையிலும் அருகில் உள்ள திருக்குளத்திலிருந்து  நீரெடுத்து வந்து திருமஞ்சனம் செய்வித்து 
இறைவனை வணங்கி வருகிறார்....

தற்போது சிவபீடம்(சிவபீடம் 9443390589)அமைப்பினர் மேற்கூரை அமைத்து வருகின்றனர்....





1 comment: