Friday, July 22, 2016

புற்று நோய் போன்ற  கொடும் நோய்கள் தீர்க்கும் அரிய திருக்கோயில் 

அருமருந்துநாயகி உடனுறை கற்கடேஸ்வரர் .....
திருத்துதேவன்குடி 

நண்டு பூசித்த நாயகன், ஆயில்ய நட்சத்திற்கு உரிய தலம். ஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் அபிமான தலம் .

தற்போதும் நண்டு பூசித்த தடயம் இறைவன் திருமேனியில் உள்ளது ...
அவர் இயற்றிய கங்காஷ்டகம் பெரும் புகழ் பெற்றது ......

இங்கு அடுத்தடுத்து இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தலங்களில் இது 42 ஆவது தலம் 
ஜாதகத்தில் சந்திரனால் தோஷம் உள்ளவர்கள் இங்கு குடிகொண்டிருக்கும் யோக சந்திரனை வழிபட தோஷம் நீங்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

தற்போது நண்டாங் கோயில் என்று அழைக்கப்படுகிறது ......


2 comments: